தூதுவளை குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். தொண்டையில் முள் மாட்டியது போன்ற உணர்வும், கிச்..கிச்.. என்ற நெருடலும் ஏற்படும். இதெல்லாவற்றையும் நீக்க தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது. தூதுவளை இலை, தண்டு இவற்றிலுள்ள முட்கள் மற்றும் காம்பு, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி நிழலில் உலரவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் 2 வேளை உணவுக்குப்பின் 1 கிராம் தூதுவளை இலைப்பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட மார்புச்சளி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல், மூக்கடைப்பு நீங்கும். நன்கு பசியும் ஏற்படும். பாலில் கலந்தும் சாப்பிடலாம். (அ) தூதுவளை துவையல் தூதுவளை இலை - 1 கைப்பிடி (காம்பு, நடுநரம்பு, முள் நீக்கி) மிளகாய் வற்றல் - 2 பூண்டு - 2 பல் நல்லெண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு செய்முறை : தூதுவளை இலையுடன் மிளகாய் வற்றல் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கியபின் அவற்றுடன் பூண்டு, புளி, உப்பு கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும். இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் தொட்டுச்சாப்பிட சளி, தொண்டை கரகரப்பு நீங்கி கலகலவென்றிருக்கும். (ஆ) தூதுவளை ஊறுகாய் தூதுவளை இலைகளை காம்பு, நடுநரம்பு, முள் நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கியபின் தேவையான அளவு மிளகாய்தூள், உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து மைய அரைத்து மேலும் சிறிது நல்லெண்ணெய் கலந்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். 2 வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். குறிப்பு : வீட்டில் தயார் செய்ய முடியாதவர்கள் கடைகளில் விற்கும் தூதுவளை லேகியம் 5 கிராம் அல்லது தூதுவளைப்பொடி 1 கிராம், 2 வேளை உணவுக்குப்பின் தினமும் சாப்பிடவும். Disclaimer: þôÀ̾¢Â¢ø þ¼õ ¦ÀÚõ ¸ðΨøû ±ÁÐ Å¡º¸÷¸û «Å÷¸Ç¢ý «ÛÀÅò¨¾§Â¡ ÀÊôÀÈ¢¨Å§Â¡ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ ±Ø¾¢Â¨Å. þó¾ì ¸ðΨøǢý ¿õÀ¸ò¾ý¨ÁìÌ “தாருல் ஸஃபா”¦À¡ÚôÀøÄ. þÅü¨È ¦ºÂüÀÎòÐÓý ÁÕòÐÅâý ¬§Ä¡º¨É ¦ÀÚÅÐ ¿Äõ. |
|