Hadith Database          

From all Hadhees collection, Quran

வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் தன் புறத்திலிருந்து உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தாருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 45:13)

முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)

நிச்சயமாக மனிதன் அவசரக் காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். ஒரு தீங்கு அவனைத் தொட்டுவிட்டால் பதறுகிறவனாகவும் உள்ளான். (குர்ஆன் 70:19,20)

நிச்சயமாக எவர்கள் அநியாயமாக அநாதைகளின் பொருட்களைத் தின்கிறார்களோ அவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பையே தின்(று நிரப்பு)கிறார்கள்; பின்னர் அவர்கள் கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பில்தான் நுழைவார்கள். (குர்ஆன் 4:10)

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த் தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவர்க்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (குர்ஆன் 2:45)
 

(முஃமின்களே!) ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் (விளைச்சல்கள்) ஆகியவற்றின் நஷ்டத்தாலும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம்; (நபியே! இச்சோதனைகளில்) பொறுமையாளர்களுக்கு (சுவனத்தைக் கொண்டு) நீர் நன்மாராயங் கூறுவீராக! (குர்ஆன் 2:155)

உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும் அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரது உளு முறியாமலிருக்கும்வரை, வானவர்கள், "இறைவா! இவரை மன்னித்து இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தனை செய்கின்றார்கள். (புகாரி)

அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை (சம்பத்தை) விரிவாக்குகிறான்; தான் நாடியவருக்கு (அதனைச்) சுருக்குகிறான்; உலக வாழ்வைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். உலக வாழ்க்கையோ மறுமைக்கு (ஒப்பிடும் போது, அதன்) முன்னே, அற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (குர்ஆன் 13:26)

உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னமே உங்களுடைய ரப்பின்பால் நீங்கள் திரும்பிவிடுங்கள்; அவனுக்கு நீங்கள் முற்றிலும் பணிந்து விடுங்கள்; (வேதனை வந்தால்) பிறகு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (குர்ஆன் 39:54)

தொழுகையை விடுவது மனிதனைக் குஃப்ரில் சேர்த்து விடுகிறது. தொழுகையை விடுவதே மனிதனையும் குஃப்ரையும் ஒன்று சேர்க்கிறது. தொழுகை ஈமானையும் குஃப்ரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. (தர்ஃகீப்)

"மனிதருக்கும் இணைவைப்பதற்கும் இடையில் தொழுகையைக் கைவிடுவதுதான் பிரித்தறிவிப்பது ஆகும்" என்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)

ஒட்டு கேளாதீர்கள்; உளவு பாராதீர்கள்; தொழிற் போட்டி போடாதீர்கள்; பொறாமைப் ப்டாதீர்கள்; பகை கொள்ளாதீர்கள்; நான் நானென்று அகங்காரம் கொள்ளாதீர்கள்; இறைவனின் அடியார்களே! சகோதரர்கள் ஆகிவிடுங்கள். (புகாரி)

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப்பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை. (புகாரி)

"எவர் எதிர்காலத்தைப் பற்றி (ஜோஸியம்) கூறுபவனிடம் சென்று, அவனிடம் எதையும் பற்றி வினவி, அவனின் கூற்றை உண்மையென நம்புவாராயின் அவருடைய நாற்பது நாள் தொழுகை ஒப்புக் கொள்ளப்படமாட்டாது." (முஸ்லிம்)

எவர் உம்மை நம்பி ஒரு பொருளை அமானிதமாக ஒப்படைத்தாரோ அதனை (அவரிடம் திரும்ப) ஒப்படைத்துவிடும். எவர் உம்மை மோசம் செய்கிறாரோ அவருக்கு நீர் மோசம் செய்யாதீர். (அபூதாவூத், திர்மிதீ)

பிறருக்கு மன வேதனை உண்டாகும் வகையில் ஒரு நோன்பாளி நடந்துகொள்வானாயின், அவன் நோன்பு நோற்றும் பயனில்லை. (ஹதீஸ்)

பொந்துகளில் சிறுநீர் பெய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தனர். (அபூதாவூத், நஸயீ)

முஃமின் களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின் மனைவியரிடம் சிறந்தவர்களே, உங்களில் சிறந்தவர்கள். (திர்மிதீ)

நிச்சயமாக அவன் (அல்லாஹ்) சொல்லில் பகிரங்கமானதையும் அறிவான்; நீங்கள் (மனதில்) மறைத்து வைத்திருப்பதையும் அறிவான். (குர்ஆன் 21:110)

ஒரு தந்தை தமது பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பளிப்புக்களில் சிறந்தது, ஒழுக்கம் கற்பித்தலேயாகும். (திர்மிதீ)

"(உலக முடிவு நாள் பற்றிய) வாக்குறுதி நெருங்கிவிட்டது. ஆனால் மனிதர்களோ அதனைப் பற்றி பாராமுகமாவே இருக்கிறார்கள்." (குர்ஆன் 21:1)

Darulsafa Home

Refer this page to your friends / relatives